IPL 2021 அப்டேட்ஸ்: விராட் கோஹ்லியின் பெங்களூரு அணியில் இலங்கை வீரர்!
ஐ.பி.எல். போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெங்களூரு அணியில் வீரர்கள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. விராட் அணியின் புதிய வீரர் யார் என்பதை இயக பதிவில் காண்போம்.
ஐ.பி.எல் போட்டிகள்:
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகளில் 29 முடிவடைந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்களின் நலன் கருதி பிசிசிஐ ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது. மீதம் உள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது.
சலாம் ராக்கி பாய்! KGF 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமீரகத்தில் நடக்கும் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க அரசுடன் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் உஸ்மானி தெரிவித்துள்ளார். மேலும், பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை அனுமதிக்க வேண்டுகோள் வைத்துள்ளது. வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி தான் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அணியின் தலைமை செயலாளர் பொறுப்பிலிருந்து சைமன் காடிச் விலகியுள்ளார். மேலும், ஆடம் ஸாம்பா. டேனியல் சாம்ஸ், ஃபின் ஆலென் ஆகியோரும் விளக்கியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக இலங்கையின் ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா, ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராயல் சேலன்ஞ்சர்ஸ் அணியில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார்.