IPL 2021 – SRH vs CSK: சென்னை அணிக்கு 135 ரன்கள் என்ற எளிய இலக்கை கொடுத்த ஐதராபாத்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், இன்று ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றது. அதில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி சென்னைக்கு 135 என்ற மிக எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
எளிய இலக்கு:
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து பல வெற்றிகளை படைத்தது வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், இதுவரை தாங்கள் ஆடிய போட்டிகளில் 8 அபார வெற்றி மற்றும் 2 தோல்வி என்று 16 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று இரவு 7:30 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரும் மோதுகின்றனர். டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.
அக்.4ம் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – உயர்கல்வி துறை அறிவிப்பு!
தொடக்க ஆட்டக்காரர்களான ராய் மற்றும் சாஹா இருவரும் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ள நிலையில், ராய் 2 ரன்களில் ஆட்டத்தை இழந்தார். அதிக பட்சமாக சாஹா 44 ரன்களை எடுத்து தனது பந்தை தோனி கேட்ச் பிடித்த காரணத்தால் ஆட்டத்தை இழந்தார். மேலும், வில்லியம்சன் மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 2 பவுண்டிரிகளை அடித்தனர். சாஹா 2 சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் ரன்களை குவித்தார்.
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
சென்னை அணியின் கேப்டன் தோனி இன்றைய ஆட்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதவாது, ஒரே ஐ.பி.எல். கிரிக்கெட் அணிக்காக அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் தோனி 100 வது கேட்சை பிடித்து அசத்தியுள்ளார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி 134 ரன்களை எடுத்துள்ளது. இதனால் அடுத்து களம் இறங்கும் சென்னை அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.