IPL 2021 – RCB vs SRH: பெங்களூர் அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூர் அணிக்கு 142 இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
எளிய இலக்கு:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன் நடப்பாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாவது கட்டமாக நடந்து வருகிறது. இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு அபுதாபி மைதானத்தில் இன்று மாலை போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.
முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்? – நிறுவனத்தின் விளக்கம்!
ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ராய் மற்றும் அபிஷேக் இறங்கினர். இவர்கள் முறையே 44 மற்றும் 13 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். ராய் எடுத்த 44 ரன்கள் தான் அதிக ரன்களாக இருந்தது. அடுத்ததாக வில்லியம்சன் மற்றும் பிரியம் முறையே 31 மற்றும் 15 ரன்கள் எடுத்தனர். அதன்பின்னர், அப்துல் சமத் 1 றன் எடுத்து அவுட்டான நிலையில் சஹா 10 ரன்களை எடுத்தனர்.
தமிழக அஞ்சலகங்களில் இனி படிவங்கள் தமிழில் இருக்கும் – எம்.பி. சு.வெங்கடேசன் பெருமிதம்!
அதன்பின்னர் ஹோல்டர் 16 ரங்களையும், ரஷீத் கான் 7 ரங்களையும் எடுத்தனர். மொத்தம் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 141 ரன்களை ஐதராபாத் அணி எடுத்து. இதனால் அடுத்து வர இருக்கும் பெங்களூர் அணிக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.