IPL 2021 – MI vs SRH: 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 55 வது நாள் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இரண்டும் மோதிய நிலையில், மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
மும்பை வெற்றி:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய நாள் 55 வது நாள் போட்டியாகும். அதில், அதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மணிஷ் பாண்டே தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டது. இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகப்பெரும் ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் களம் இறங்கினர். இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முக்கிய விழாக்களை குடும்பத்துடன் கொண்டாட காவல் துறையினருக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷன் கிஷன் இருவரும் இறங்கிய நிலையில் முறையே 18 மற்றும் 84 ரன்கள் எடுத்தனர். இஷன் இன்றைய ஆட்டத்தில் தனது அபார ஆற்றலை வெளிப்படுத்தி அணிக்கு ரன் மழையை பொழிந்தார். ஹர்டிக் 10 ரன்கள், போலார்டு 13 ரன்கள் மற்றும் சூர்யா குமார் 82 ரன்களை அடித்தனர். அடுத்ததாக வந்த நீஷம் டக் அவுட் ஆனார். இறுதியாக 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்தனர். இதனால் அடுத்ததாக களம் இறங்கும் ஐதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இணையவழி பணப்பரிமாற்றத்தில் அதிகபட்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!
அடுத்ததாக களம் இறங்கிய ஐதராபாத் அணியில் ஜேசன் ராய் மற்றும் அபிஷேக் இருவரும் முறையே 34 மற்றும் 33 ரன்களை எடுத்தனர். அணியில் அதிகபட்சமாக மணீஷ் 69 ரன்கள் எடுத்தார். பிரியம் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணியின் பும்ரா, நாதன், நீசம் மூவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை ஐதராபாத் அணியினர் எடுத்தனர். இதனால் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.