IPL 2021 – KKR vs RR: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொள்ளும் நிலையில், ராஜஸ்தான் அணிக்கு முதலில் ஆடிய கொல்கத்தா அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடர்:
ஐபிஎல் தொடரின் 54 வது போட்டி இன்று ஷார்ஜா மைதானத்தில் மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும். டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
அடுத்த 3 மாதங்கள் அதிக கவனம் தேவை – சுகாதார செயலர் எச்சரிக்கை!
கொல்கத்தா அணியில் முதலில் கில் மற்றும் வெங்கடேஷ் இருவரும் களம் இறங்கினர். இவர்கள் முறையே 56 மற்றும் 38 ரன்களை எடுத்தனர். முதல் விக்கெட்டாக வெங்கடேஷ் ஐயர் 10 வது ஓவர் முடிவில் அவுட் ஆனார். நிதிஷ் ராணா மற்றும் திரிபாதி இருவரும் முறையே 12 மற்றும் 21 ரன்களை எடுத்தனர். நிதிஷ் 11 ஓவர் முடிவில் ஆட்டத்தை இழந்தார். மூன்றாவதாக கில் 15 ஓவரில் ஆட்டமிழந்தார்.
அக்.15முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!
கார்த்தி 14 ரன்கள் மற்றும் மோர்கன் 13 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் மோரிஸ், சகாரியா, ராகுல், பிலிப்ஸ் ஆகியவர்கள் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 171 ரன்களை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்துள்ளனர். இதனால் அடுத்து களம் இறங்கும் ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.