IPL 2021: CSK vs PBKS – பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 12 ரன்களில் (14 பந்துகள், 1 பவுண்டரி) வெளியேறி அதிர்ஹஸி அளித்தார். அதன் பிறகு சேனை விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரியாய் ஆரம்பித்து விட்டது. அடுத்து வந்த மொயீன் அலி டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து உத்தப்பா (2), அம்பதி ராயுடு (4) இருவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
கேப்டன் தோனியும் 12 ரன்கள் (15 பந்துகள், 2 பவுண்டரி) ஜொலிக்கவில்லை. ஒரு புறம் விக்கெட்டுகள் சேர்ந்தாலும் மறுமுனையில் மற்றொரு துவக்க வீரர் டு பிளசி நிலைத்து நின்று ரன் குவித்தார். டுபிளசி 76 ரன்களில் (55 பந்துகள், 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. களத்தில் ஜடேஜா (15) மற்றும் பிராவோ (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி, ரவி பிஷ்னோய் தலா 1விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 135 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியில், மயங்க் அகர்வால் (12), ஷாருக் கான் (8), சர்பராஸ் கான் (0) விரைவில் திரும்ப மறுமுனையில் கேப்டன் ராகுல் ருத்ர தாண்டவம் ஆடினார். வான வேடிக்கைகளால் விருந்து படைத்த அவர் 98 ரன்கள் (42 பந்துகள், 7 பவுண்டரி, 8 சிக்ஸர்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 13 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் தொடரை புனைப அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.