IOCL நிறுவனத்தில் ITI/ Diploma முடித்தவர்களுக்கான வேலை – 548 காலிப்பணியிடங்கள்!!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு குறித்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டது. அதில் டிரேட் அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிகளில் காலியாக உள்ள 548 பணியிடங்களை நிரப்ப ஆட்தேர்வு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வயது வரம்பு, கல்வி தகுதி முதலிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி முடிவடையும் முன் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி டிரேட் அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிகளுக்கு 548 பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ ஐடிஐ/ டிப்ளமோ போன்ற ஏதாவது ஒன்று படித்திருப்பது கட்டாயமானதாகும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தது 18 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும் என வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த பணிகளுக்கான ஊதிய விவரம் தற்போது வெளியான அறிவிப்பில் கொடுக்கப்படவில்லை.
- விண்ணப்பதாரர்கள் டிரேட் அப்ரண்டிஸ் & டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிகளுக்கு எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து சரியான விண்ணப்பத்தை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 04.12.2021 ம் தேதிக்கு பின் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளையுடன் அதற்கான கால அவகாசம் முடிவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.