இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10ம் வகுப்பு முடித்தவர்க்கு காத்திருக்கும் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Security Guard பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Overseas Bank |
பணியின் பெயர் | Security Guard |
பணியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Indian Overseas Bank காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Security Guard பணிக்கு என்று 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக வங்கி நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Overseas Bank கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Indian Overseas Bank வயது வரம்பு:
இப்பணிக்கு 01.05.2022 ம் தேதியின் படி, குறைந்தபட்ச வயதாக 18 வயதும், அதிகபட்ச வயதாக 26 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அவசியம் 18 முதல் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.
Indian Overseas Bank ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தது ரூ.14,500/- முதல் அதிகபட்சம் ரூ.28,145/- வரை மாத ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
Indian Overseas Bank தேர்வு முறை:
- எழுத்து தேர்வு (Written Test)
- உடல் தகுதித் தேர்வு (Physical Test)
- நேர்முகத் தேர்வு (Interview)
Indian Overseas Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதும் என்று அறிவித்துள்ளது.