தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்பு அறிமுகம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நான் முதல்வன் என்கிற திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (டிஎன்எஸ்டிசி) தெரிவித்துள்ளது.
திறன் சார்ந்த படிப்பு:
தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (டிஎன்எஸ்டிசி) ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்துடன் நான் முதல்வன் விருப்பத் தேர்வை எழுத வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது. மேலேயும், ஒவ்வொரு செமஸ்டரிலும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நான் முதல்வன் திட்டத்தின் விருப்பப்பாடம் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தான் திறன் சார்ந்த படிப்புகளை பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே திறன் சார்ந்த படிப்புகளை கற்றுக் கொள்ளும் படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு திறன் சார்ந்த படிப்புகளாக பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, ஐஓடி, தொழிற்சாலை 4.0, இயந்திர வழி கற்றல் மற்றும் உற்பத்தியில் ரோபோடிக் சிமுலேஷன் உள்ளிட்ட பாடங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் பயணிகள் தகவலை விற்று ரூ. 1000 கோடி லாபம்? IRCTC விளக்கம்!
மேலும், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு கேமிங் மற்றும் அனிமேஷன், மீடியா மற்றும் ஜர்னலிசம், கேபிடல் மார்க்கெட்ஸ், ஃபைனான்சியல் மார்க்கெட்ஸ், ஃபின்டெக், ஹெல்த், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இன்டர்வியூ ரெடினெஸ் ஆகிய பாடங்கள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இந்த திறன் சார்ந்த படிப்புகள் அனைத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஎன்எஸ்டிசி) இணையதள முகவரியில் உள்ள நான் முதல்வன் என்கிற பகுதியில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்