பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய முறை அறிமுகம் – செயலாளர் அறிவிப்பு!

1
பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய முறை அறிமுகம் - செயலாளர் அறிவிப்பு!
பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய முறை அறிமுகம் - செயலாளர் அறிவிப்பு!
பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய முறை அறிமுகம் – செயலாளர் அறிவிப்பு!

பி.இ , பிடெக், பிஆர்க் போன்ற பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அறிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் பி.இ , பிடெக், பிஆர்க் போன்ற பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்தான ஆலோசனை கடந்த சில வாரங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது வரைக்கும் பொறியியல் படிப்புகளில் சேர 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு இன்ஜினீரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை புதிய முறையில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதாவது, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் 79 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், விளையாட்டு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு பிறகு பி.இ , பிடெக், பிஆர்க் போன்ற பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பிரிவினருக்கும் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த 7 நாட்களுக்கு பிறகு கல்லூரியில் சேர அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடை திறப்பு பற்றி அறிய புதிய வசதி – முக்கிய தகவல் வெளியீடு

அவ்வப்போது சேராத மாணவர்களின் இடங்கள் காலியாக உள்ளதாக காண்பிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர் எந்த இடத்தை தேர்வு செய்கிறாரோ அதற்கான கட்டணத்தை செலுத்தி அந்த இடத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதனால், கலந்தாய்வில் மாணவர்கள் ஒரு இடத்தை தேர்வு செய்த பின்னர் அதில் சேராமல் இருக்கும் நிலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. ஒவ்வொரு சுற்றிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்த 7 நாட்களுக்கு பிறகு கல்லூரியில் சேர அனுமதி வழங்கப்படும்

    தவறான செய்தி. 7 நாட்களுக்குள் என்பதே சரி. Please dont confuse

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!