தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சீன பட்டாசுக்கு பதில் 100% பசுமை பட்டாசு – அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து சீன பட்டாசுகளால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் பசுமை பட்டாசுகள் கொண்டு வர உள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
பசுமை பட்டாசு
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. இதனால் பட்டாசு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் நேரக் கட்டுப்பாடுகள் தேவையில்லை என்ற நிலையிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு நேரக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால் இந்த நேரக்கட்டுப்பாடானது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை பாதிக்காத வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுக்களை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் வரை வெடிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சுற்றுலா துறை சார்பாக சென்னை தீவுத்தொடரில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கு 47 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார். இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்திடாத வகையில் 100% பசுமை பட்டாசுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்