இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் – முதல் நாளிலேயே ரூ.275 கோடி வர்த்தகம்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக அரசு சார்ந்த பண பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நேற்று மட்டும் ரூ. 275 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
டிஜிட்டல் கரன்சி:
இந்தியாவில் வளர்ந்து வரும் இணைய பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் எளிதாகி விட்டது. இன்றைக்கு ஆன்லைன் வாயிலாக பண பரிமாற்றம் செய்யாதவர் யாரும் இருக்க முடியாது. இதனால் வங்கிகளில் நேரம் செலவிட வேண்டியதில்லை , எங்கும் அலைய தேவையில்லை இதனை கருத்தில் கொண்டே மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறி விட்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி நேற்று (நவ.01) டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது. இதனை அரசு பங்கு பத்திரங்களில் பண பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் முதல் கட்டமாக இந்தியாவில் SBI, HDFC, BOB, IDFC, ICICI, UBI உள்ளிட்ட 9 வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த அனுமதித்துள்ளது.
காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர் … தொடங்கும் அவசர கால நடவடிக்கை!
Follow our Instagram for more Latest Updates
தற்போது சோதனை அடிப்படையில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் வளர்ச்சியை பொறுத்து விரிவுபடுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த நிலையில் முதல் நாளான நேற்று மட்டும் சுமார் ரூ. 275 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரைவில் சில்லறை டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளுக்கும் கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.