தமிழகத்தில் உள்ளோருக்கான புதிய கல்வி திட்டம் அறிமுகம் – உத்தரவு வெளியீடு!

0
தமிழகத்தில் உள்ளோருக்கான புதிய கல்வி திட்டம் அறிமுகம் - உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் உள்ளோருக்கான புதிய கல்வி திட்டம் அறிமுகம் - உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் உள்ளோருக்கான புதிய கல்வி திட்டம் அறிமுகம் – உத்தரவு வெளியீடு!

தமிழகத்தில் குடும்ப சூழ்நிலைகளால் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 படிக்கும் வாய்ப்பை தவற விட்டோருக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக ஒரு சிலர் பணியாற்றி வந்தனர். இவர்கள் முன்னதாக படித்தது 10 ஆம் வகுப்பிற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களை கேங் மஸ்துார் நிலைக்கு பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Exams Daily Mobile App Download

அதில் மனுதாரர்கள் சாலை ஆய்வாளர் பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்து அரசு தரப்பில் மனுதாரர்கள் முன் அடிப்படை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை கல்வித் தகுதியின்படி கேங் மஸ்துாராக நியமிக்கப்பட்டனர். ஆனால் அப்போது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி இல்லை. முன் அடிப்படை கல்வி படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி படிப்பிற்கு இணையானதாக அங்கீகரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

ரயில் பயணிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – பெட்டிகளில் புதிய வசதி அறிமுகம்!

இந்நிலையில் இது குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மனுதாரர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதால் பதவி இறக்கம் செய்யப்பட்டால் அவர்களின் குடும்பம், சமூகத்தில் அந்தஸ்து பாதிக்கும். அதனால் மனுதாரர்களை பதவி இறக்கம் செய்ய முடியாது. மனுதாரர்கள் 2017 நவ., 20க்கு முன்பே முன் அடிப்படை கல்வியை முடித்திருப்பதால், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள், இதனால் பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தனர். மேலும் முன்னதாக படிக்காமல் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!