மத்திய அரசின் PM கிசான் திட்டத்தில் ரூ.2000 தவணைப்பணம் – புதிய வழிமுறை அறிமுகம்!
பிரதமர் கிசான் திட்டத்தின் பயனர்கள் தங்களது கணக்கு விவரங்களை சரிபார்க்க இப்போது மொபைல் எண்ணையும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
கிசான் திட்டம்
நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் மூலம் ரூ.6000 நிதிப்பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ரூ.2000 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட கிசான் திட்டத்தின் 11வது தவணைப்பணம் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் இந்த நிதிப்பணத்தை இன்னும் பெறவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
இதற்கு காரணமாக கிசான் பயனாளிகளின் ஆதார் எண், மொபைல் எண், வங்கிக் கணக்கு ஆகியவற்றில் தவறுகள் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போது இந்த எல்லா விவரங்களும் சரியாக இருந்தும் பணம் கிடைக்கவில்லை என்றால் பிஎம் கிசான் இணையதளத்தில் சென்று அதை சரிபார்க்க முடியும். அந்த வகையில் பயனர்கள் www.pmkisan.gov.in என்ற இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் தங்களது கணக்கு விவரங்களை சரிபார்த்து அதனை திருத்திக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் மின்வாரிய பணியாளர்கள் கவனத்திற்கு – சீருடை விதிகள் கட்டாயம்!
இப்போது முதலாவதாக www.pmkisan.gov.in என்ற இணையத்தை திறந்து farmers corner என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். தொடர்ந்து, beneficiary status என்ற தேர்வை கிளிக் செய்து ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும். இப்போது பிஎம் கிசான் இணையத்தில் பயனாளியின் நிலையை சரிபார்ப்பதற்கான வழிமுறை மாற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதாவது, இனி மொபைல் நம்பர் மூலமாகவும் பயனர்கள் தங்களது கணக்கு விவரங்களை சரிபார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.