ட்விட்டர் (Twitter) பயனர்களுக்கு செம அறிவிப்பு – ப்ளூ டிக் மீண்டும் அறிமுகம்!
கடந்த சில காலமாக ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்கள் கணக்கிற்கு வழங்கப்படும் நீல டிக் முறையை நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது அந்த முறையை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ட்விட்டர் அப்டேட்:
சமூக வலைதள செயலிகளில் மிக முக்கிய பங்கினை வகித்து வருகிறது ட்விட்டர். இந்த தளத்தை உலக நாட்டு தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதிக அளவு பயனாளர்களை கொண்டுள்ள வலைத்தளம் என்ற பெருமையையும் ட்விட்டர் பெற்றுள்ளது. இந்த வலைத்தளம் மூலம் அனைவரும் பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டு வருவர். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் இந்த வலைத்தளம் விவாத மேடையாகவும் மாறிவிடும்.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்று வருகிறது ட்விட்டர் நிறுவனம். மேலும் ட்விட்டர் தலத்தில் கணக்கு வைத்திருக்கும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக நீல டிக் வழங்கி வரும். இந்நிலையில் இந்த முறையை கடந்த சில காலமாக ட்விட்டர் நிறுவனம் நிறுத்தியது. இதனை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15ம் தேதி வரை நீட்டிப்பு!!
தற்போது அவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் மீண்டும் நீல நிற மார்க் முறையை ட்விட்டர் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம், இதுவரை இந்த முறையை நிறுத்திவைக்கப்பட்டிருந்ததற்கு மன்னிக்கவும் என்றும் இனி நீங்கள் நீல டிக் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை பெறுவதற்கு ட்விட்டர் அரசு நிறுவனங்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளுக்கு கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.