ஆதார் அட்டை தாரர்களுக்கு புதிய வசதி அறிமுகம் – UIDAI அறிவிப்பு!
இந்தியாவில் ஒவ்வொரு தனி மனிதனின் முக்கிய அடையாளமாக ஆதார் விளங்குகிறது. இத்தகைய ஆதார் அட்டையில் ஒரு புதிய வசதியை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து தகவல்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
ஆதார் அட்டை:
நாட்டில் தற்போது ஆதார் எல்லா தேவைகளுக்கும் அவசியமானதாக திகழ்கிறது. ஆதார் அட்டை வெறும் அடையாளமாக மட்டுமல்லாமல் பல அரசு மற்றும் அரசு சாரா சலுகைகளை பெற கட்டாய ஆவணமாகவும் உள்ளது. ஆதாரில் அனைத்து விதமான தகவல்களும் இருப்பதால் அது தனித்துவமான அடையாளமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையில் வழங்கப்படும் 12 இலக்க எண் வங்கி கணக்கு திறப்பு, kyc உள்ளீடுகள் மற்றும் பல அத்தியாவசியமான தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்திய ஆதார் ஆணையம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய தொலைநிலை உணர்திறன் மையத்துடன் இணைந்து பவன் ஆதார் என்ற புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. மேலும் இந்த புதிய திட்டம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சேவை செய்வதற்காகவும், இணையதளம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஆதார் மையங்களின் இருப்பிடங்கள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இந்த பவன் ஆதார் இணையதளம் யுஐடிஏஐ இஸ்ரோ மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – ரயில்வே வாரியம் எச்சரிக்கை!
மேலும் இந்த இணையதளம் மூலம் அருகில் உள்ள ஆதார் மையங்களை பற்றிய தகவல்களை பவன் ஆதார் திட்டத்தின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு ஏப்ரல் 8 ம் தேதி தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் யுஐடிஏஐ மற்றும் என்ஆர்எஸ்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஆதார் மையங்களின் தகவல்களை தெரிவிக்கும் பவன் ஆதார் திட்டத்தை நாசாவின் தேசிய தொலைநிலை உணர்திறன் உருவாக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்க UIDAI தனது தொடர்ச்சியான முயற்சிகளில் ஆதார் மையங்களின் புவி இடைவெளி காட்சியை எளிதாகும் ‘பவன் ஆதார்’ போர்ட்டலை அறிமுகப்படுத்துகிறது. பவன் ஆதார் இணையத்தளத்திற்குள் நுழைய https://bhuvan.nrsc.gov.in/