ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் – பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

0
ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் - பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு! (1)
ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் - பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு! (1)
ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் – பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மலிவான உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமலில் உள்ளது. இந்த முறையால் வயதானவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் கண் கருவிழி சரி பார்க்கும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்ய முடிகிறது. ஏனெனில் இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் ரேஷன் கார்டுதாரர் கைரேகை பதிவு செய்த பிறகு விநியோகிக்கப்படுகிறது.

இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் தங்களின் கையொப்பமிட்டு பொருட்களை பெற்று வருகின்றனர். அத்துடன் மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இது தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் கூறியது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டம் முதலாவதாக செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றால் தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும் என்றும் அத்துடன் ரேஷன் கடைகளில் நடைமுறையில் உள்ள பயோ மெட்ரிக் முறை வழக்கம் போல் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!