ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் அறிமுகம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலையில் ரயில்வேத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்லீப்பர் பெட்டிகள்:
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் அரசுப் பேருந்து கட்டணங்களை விடவும் ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் நெடுந்தொலைவு செல்ல விரும்பும் நடுத்தர, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயில்களையே நாடுகின்றனர். கட்டணமும், நேரமும் குறைவு என்பதால் ரயில் பயணம் மக்களுக்கு சௌகரியமாக உள்ளது. இந்த நிலையில் ரயில்வேத்துறைக்கு கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் சற்று சரியத் தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக மீண்டும் ரயில்கள் இயங்க தொடங்கியதால் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ரயில்வேத்துறை புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. திட்டத்தின்படி, தொலைதூர ரயில்களில் இனி ‘ஏசி அல்லாத’ ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இணைக்கப்படும், மற்ற எல்லா பெட்டிகளும் ஏ.சி. பெட்டிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தினால் இந்த ரயில்கள் அனைத்திலும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இருக்கும். மேலும், இதனால் பயணிகள் அனைவரும் வேறு வழியில்லாமல் ஏ.சி. பெட்டிகளிலேயே பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதனால் பயண கட்டணமும் உயரும். பாண்டியன், முத்துநகர், மலைக்கோட்டை, சோழன், பொதிகை மற்றும் நீலகிரி உள்ளிட்ட எல்.எச்.பி விரைவு ரயிலில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் ஜூலை 18 ஆம் தேதி திறப்பு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
மேற்சொன்ன ரயில்களில் இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்குப் பதிலாக ஏசி – 3 டயர் பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைக்கும். கடந்த ஜூன் 6 ஆம் தேதி தெற்கு ரயில்வே மற்றும் பிற மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் இது குறித்த உத்தரவை வழங்கியது குறிப்பிடத்தக்கது. எல்.எச்.பி. ஸ்லீப்பரின் ஒரு பெட்டியில் 80 பயணிகள் (படுக்கைகளில்) பயணம் செய்யலாம். இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 560 லிருந்து 160 ஆகக் குறையும் நிலை ஏற்படும்.