தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய செயலி அறிமுகம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழகத்தில் மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டு திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
புதிய திட்டங்கள்:
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் ஜெய்வாய்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிக்கான உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ,செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ்; 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்று கூறினார்.
TN TET தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும். மேலும் விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது , உடல் ரீதியாக மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறினார். உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்து, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்பதற்கான திட்டமும் உள்ளதாக கூறினார்.
Exams Daily Mobile App Download
பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு ஜோதி நிகழ்வை துவக்கி வைத்த பிறகு, பள்ளி கல்விதுறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. மேலும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ்; மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுப்பதால், அவர்களை இது போன்ற விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதின் மூலம் அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றும் செயலி பற்றி அமைச்சர் கூறினார்.
விளையாடும் மாணவர்கள் மிலிட்டரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் நோயிலிருந்து விடுபட முடியும்.