தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!
தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு துறையில் கிராமிய அஞ்சல் காப்பீட்டு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வு நாளை நவ.10 ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
அஞ்சல் துறையில் வேலை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. கூடிய விரைவில் தேர்வுகள் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். கொரோனாவை தொடர்ந்து வேலையில்லாமல் நிறைய பேர் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராமிய அஞ்சல் காப்பீட்டு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
இந்த காலிபணியிடங்களுக்கு 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதி உடையவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்தவர்களுக்கு இந்த பணிக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டு 65 வயது உடையவர்களை தகுதியுடையவர்களாக குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த காலிப்பணியிட அறிவிப்பானது ஸ்ரீரங்கம் மாவட்ட அஞ்சல் கோட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 – நுழைவுச் சீட்டு வெளியீடு! நவம்பர் 20 முதல் தேர்வு!
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை நவ.10 ம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். நேர்முகத் தேர்வில் பங்கு பெறுபவர்கள் அசல் கல்வித் தகுதி சான்று, வயது சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் எண், பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த நேர்முக தேர்வின் மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.