IPL 2022 புதிய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா – பெருமையாக உள்ளதாக பேட்டி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
IPL 2022 புதிய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா - பெருமையாக உள்ளதாக பேட்டி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
IPL 2022 புதிய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா - பெருமையாக உள்ளதாக பேட்டி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
IPL 2022 புதிய அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா – பெருமையாக உள்ளதாக பேட்டி! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் IPL தொடரின் அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று அகமதாபாத் அணி குஜராத் டைட்டன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பெயர் மாற்றம் குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டியளித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா பேட்டி:

இந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கவிருக்கும் IPL தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்க உள்ளன. சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக விளையாடும் அகமதுபாத் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த IPL தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கான விளையாடிய ரஷித் கான் மற்றும் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுக்மான் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பிப்.16 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பாண்டியாவை அகமதாபாத் அணி 15 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஐபிஎல் அணி மெகா ஏலத்திற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை அவ்வணியின் உரிமையானா CVC குழு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பிப்ரவரி 9 ஆம் தேதி தெரிவித்தது. இவ்வாறு அகமதாபாத் அணியின் திடீர் பெயர்மாற்றம் குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டியளித்துள்ளார்.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.7.3 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

அப்பேட்டியில் ஐபிஎல் அணிக்கு நான் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும், மேலும் அகமதாபாத் அணியின் பெயர் மாற்றப்பட்டு நேற்று CVC குழு அறிவித்தது. புதிய பெயரான ‘குஜராத் டைட்டன்ஸ்’ என்ற பெயர் தனது சொந்த அணியான மாநிலத்தின் ஆற்றலைக் குறிக்கிறது என்று பாண்டியா கூறினார். இவ்வாறு குஜராத் என்று பெயரிடப்பட்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும் இம்முறை குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தி 2022 IPL கோப்பையை வெல்ல முயலுவேன் என்றும் தெரிவித்தார். பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கும் மெகா ஏலத்தில் குஜராத் அணி சிறந்த வீரர்களை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!