TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது நேர்காணலுக்கான தேதிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

நேர்காணலுக்கான தேதி

கொரோனா கால கட்டத்தில் அனைத்து விதமான அரசு தேர்வுகள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் 1,540 பேர் பங்கேற்றனர்.

டிசம்பர் 20 வரை 8 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இதில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு மற்றும் அப்பதவிக்கான விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 384 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு வருகிற டிச.21 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகளுக்கான வேளாண்மை அலுவலர் பதவிக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் 12,222 பேர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு, நேர்காணல் மற்றும் அப்பதவிக்கான விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 721 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற டிச.27 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரையும் மற்றும் ஜன.4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2022-ஆம் ஆண்டில் போட்டித் தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!