இன்று முதல் 5 நாட்கள் இணையதள சேவை முடக்கம் – மணிப்பூர் அரசு உத்தரவு! அச்சத்தில் பொதுமக்கள்!
மணிப்பூர் மாநிலத்தில் கோரிக்கைகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி அனைத்து பழங்குடி இன மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் இன்று முதல் 5 நாட்கள் மொபைல் இணையதள சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என மாநில அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இணையதள சேவை முடக்கம்:
மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது பிஷ்னுபூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து மணிப்பூர் முழுவதும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மொபைல் டேட்டா சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை சிறப்புச் செயலர் ஞான பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார் . இது தொடர்பாக சிறப்புச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில், சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் தவறான பேச்சுகளை பரப்புகின்றனர்.
நீங்களும் ஆகலாம் அரசு பள்ளி ஆசிரியர் – அரிய வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க!
இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஷ்னுபூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியது, கடந்த சனிக்கிழமை மாலை பூகாக்சாவ் இகாங்க் பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 நபர்களால் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இந்த குற்றச் செயல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் வகுப்புவாத கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த வெள்ளிக்கிழமையன்று மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ஏடிஎஸ்யூஎம்), தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் மணிப்பூரில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக அரசு, தங்கள் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதையடுத்து, பிஷ்ணுபூர் மாவட்ட கலெக்டர், மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.