‘ஆசிரியர் பணியே அறப்பணி’ – இன்று சர்வதேச ஆசிரியர் தின கொண்டாட்டம்!
அக்டோபர் 5ம் தேதியான இன்று சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர்களை போற்றி கொண்டாடப்படும் இந்த நாளில் அவரவர் தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மரியாதை செலுத்தினால் சிறப்பு.
ஆசிரியர் தினம்:
முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வி தொடர்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்கள், கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவு கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது. தமிழகத்தில் ஆசிரியராகவும் இந்திய குடியரசுத் தலைவராகவும் பணிபுரிந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
சென்னை : கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
அதேபோல் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பால் 1994 ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பை தொடர்ந்து அக்டோபர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பது அல்ல. ஒழுக்கம், பண்பு, பொது அறிவு, ஆன்மிகம் என அனைத்தையும் எடுத்துத்துரைத்து அவர்களை சிறந்த மனிதராக்கும் உன்னத பணி ஆசிரியர் பணி என சான்றோர் பலர் கூறியுள்ளனர்.
திருப்பதி செல்லும் தமிழக பக்தர்களின் கவனத்திற்கு – தேவஸ்தான தலைவர் அறிவிப்பு!
உலகம் முழுவதும் சில நாடுகளில் விடுமுறை வழங்கப்படும், சில நாடுகளில் பணி நாளாகவும் அமைக்கப்படும் ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி என்னும் சொல்லிற்கு தகுந்தாற்போல் தம் பணியை சிறப்பாக செய்துவரும் ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.