நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கு அபராதத்துக்கு இடைக்கால தடை – காரசார விவாதம்!
நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான தமிழக அரசின் வரியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அபராதம் செலுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சொகுசு கார் வழக்கு:
தமிழ் திரையுலகில் அதிகளவு சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காரை இறக்குமதி செய்வதற்கான பல வரிகளை அவர் ஏற்கனவே செலுத்தியிருந்தார். எனினும் தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இனி தபால் நிலையங்களில் ‘பாஸ்போர்ட்’ அப்ளை செய்யலாம் – முழு விவரம் இதோ!
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய் மீது பல விமர்சனங்களை முன் வைத்து வழக்கு தொடர்பாக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த விமர்சனங்களை எதிர்த்த நடிகர் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
TN Job “FB Group” Join Now
வழக்கு விசாரணையில், நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், நடிகர் விஜய் மீதான சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான விமர்சனங்களை நீக்க வேண்டும். இறக்குமதி செய்த கார் மீது நுழைவு வரி விதிக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக தான் வழக்கு தொடர்ந்தோம். மேலும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என பேசினார். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, நடிகர் விஜய் மீது செலுத்தப்பட்ட அபாரதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் மீதமுள்ள 80% வரியை இன்னும் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.