வன்னியர் 10.5 % இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் மறுப்பு!
தமிழகத்தில் வன்னியர் பிரிவு மக்களுக்கு அளித்த 10.5 % இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்க அமைப்புகளுகும் அரசை வலியுறுத்தி வந்தன. கடந்த மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அதன் தொடர்புடைய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பாலிசிகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பிக்க கால அவகாசம் – எல்ஐசி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதன் படி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% சிறப்பு இடஒதுக்கீடு அமலானது. அதன் படி 10.5%, சீர்மரபினர்களுக்கு 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் ஏற்கனவே இட ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இட ஒதுக்கீடு அளித்தது குறித்து உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது. அதன் பிறகு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை மற்றும் நியமனங்கள் உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.