தமிழகத்தில் இந்த தேர்வு நடத்த இடைக்கால தடை – உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!
தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் இரண்டு நிலைகளில் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு தேர்வு முறையில் மாற்றம் அறிவிக்கப்பட்ட நிலையில் தட்டச்சு தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தட்டச்சு தேர்வு:
தமிழகத்தில் அரசு அனுமதியுடன் மொத்தமாக 3500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். தட்டச்சு பயிற்சி பெற்றால் அரசு வேலைகளில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் பலர் தட்டச்சு பயிற்சியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும்.
வழக்கமாக இந்த தேர்வானது தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடத்தப்படும். அதில் இளநிலை தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு, தாள் – 2 ஸ்டேட்மென்ட், லெட்டர் டைப்பிங் என இருக்கும். அதனை தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். இந்த முறையில் தான் பல ஆண்டுகளாக தட்டச்சு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டு இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள்-2 ஸ்பீடு என மாற்றப்பட்டது.
அக்டோபர் மாதத்தில் இவ்வளவு நாட்கள் வங்கி விடுமுறையா – முன்பே தெரிஞ்சு வச்சுக்கோங்க!
Exams Daily Mobile App Download
அதனால் அந்த புதிய முறையை மாற்றி ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவில் பழைய முறைப்படி தேர்வு நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின் இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதன் படி பழைய முறைப்படியே தேர்வு நடைபெறும் என்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்