வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா? RBI வெளியிடவுள்ள ஜாக்பாட் அறிவிப்பு!!
நாட்டில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நிலை பின்னோக்கி செல்வதை அடுத்து, நாட்டின் பண வீக்கம் அதிகரித்ததை அடுத்து இனி வரும் மாதங்களில் இந்த நிலை மாறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வட்டி விகிதம்:
உலகின் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், மிகவும் மோசமான விளைவுகளை நாம் சந்திக்கும் நிலை வந்தது. வேலைவாய்ப்புகள் குறைவு முதல் விலைவாசி உயர்வு வரை அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில், 2022- 2023ம் நிதியாண்டின் 3ம் காலாண்டில் நாட்டின் பண வீக்க விகிதமானது ரிசர்வ் வங்கியின் இலக்கை விட கீழே இறங்கியுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும், உயர்த்த வாய்ப்பில்லை என்று தெரிகிறது. குறிப்பாக, இந்திய பங்கு சந்தைகள் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதால், இந்திய பொருளாதார நிலை வளர்ச்சி பாதையில் பயணிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சராசரி நுகர்வோர் விலை குறித்த குறியீடு 6.1% ஆக உள்ளதால், இந்த விகிதம் வரும் புதிய காலாண்டில் மேலும் உயர வாய்ப்புகள் உள்ளது.
ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
குறிப்பாக, ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயர்த்தப்படாது என்பதால், வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் போன்றவற்றின் வட்டியினை உயர்த்தும் நிலை இருக்காது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.