சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர வாய்ப்பு!
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய அரசு கடந்த சில மாதங்களாகவே உயர்த்தாமல் இருந்தது. இந்நிலையில் கூடிய விரைவில் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறு சேமிப்பு திட்டம்
வங்கிகளில் பணம் சேமிப்பு இதைவிட பலரும் சிறு சேமிப்பு திட்டங்களில் இணைந்து அதில் முதலீடு செய்வதை தான் பெரிதும் விரும்புகின்றன. மேலும், வங்கிகளை விட சிறு சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுவதால் கூடுதல் வருமானம் கிடைப்பதாலும் பலரும் இதில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதாவது, சிறு சேமிப்பு திட்டங்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு வட்டி வீதத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு? மா.சுப்பிரமணியன் விளக்கம்!
இதன்படி தற்போது ஜூலை – செப்டம்பர் மாதத்திற்கான வட்டி விகிதம் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த சில மாதங்களாகவே சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படாமலே உள்ளது. இந்நிலையில் தற்போது வட்டி விகிதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சிறு சேமிப்பு திட்டத்தில் சேர விரும்புபவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகவே எளிதாக சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
சிறு சேமிப்பு திட்டங்களில் எக்கச்சக்கமான சேமிப்பு நலத்திட்டங்கள் இருக்கிறது. தற்போது எந்தெந்த நலத் திட்டங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்பதனை பார்க்கலாம். அதாவது, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (SB), தேசிய சேமிப்பு நிரந்தர வைப்பு நிதி (FD), தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி (RD), மாத வருமானத் திட்டம் (MIS), சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSA), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) ஆகிய நலத்திட்டங்கள் இருக்கிறது