ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!
இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ கடனுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் இனி கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் மாதம் செலுத்த வேண்டிய கடன் தொகையானது அதிகரிக்கும்.
வட்டி விகிதம்:
இந்தியாவில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது வட்டி 4.90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக சக்தி காந்த் தாஸ் தெரிவித்துள்ளார். 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கடந்த 2 மாதத்தில் மட்டும் 0.9% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு – வருகை சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்!
மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் நிதிக்கொள்கை கூட்டத்தில் 0.35% வரை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கி தனது எக்ஸ்ட்டர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட்-னை அதிகரித்துள்ளது. இந்த EBLR விகிதமானது ஜூன் 8, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தனியார் வங்கியானது ஜூன் 1 முதல் ஏற்கனவே எம்சிஎல்ஆர் விகிதத்தினையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வட்டி விகிதம் 1 நாள் 7.30% ஒரு மாதம் – 7.35% மூன்று மாதம் – 7.35% 6 மாதங்கள் – 7.50% 1 வருடம் – 7.55% ஆக உள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது ஐசிஐசிஐ வங்கியின் இந்த வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதால் இனி வாடிக்கையாளர்களுக்கு மாத மாதம் செலுத்த வேண்டிய தவணை தொகையானது அதிகரிக்கலாம். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் முன்பு செலுத்தியதை விட கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.