Axis வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – வட்டி விகிதம் உயர்வு!
இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வங்கிகளில் சேமிப்பவர்களின் விகிதம் உயர்ந்துள்ளது. அத்துடன் தற்போது வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆக்ஸிஸ் வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் உயர்வு
இந்தியாவில் பொருளாதார ரீதியில் முன்னேற பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர். இதில் குறிப்பாக வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து சேமிப்பு கணக்குகளிலும் தற்போது பெரும்பாலானோர் சேமித்து வருகின்றனர். மேலும் பணவீக்கம் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு வங்கிகள் சேமிப்பு கணக்கிற்க்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றனர்.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF இருப்பு தொகையை தெரிந்து கொள்வது எப்படி?
மேலும் இந்த வட்டி உயர்வு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இந்த வட்டி உயர்வு சேமிப்புதாரர்களுக்கு குறைந்த நாட்களில் அதிக பணத்தை சேமிக்க வழிவகை செய்கிறது. இதையடுத்து தற்போது ஆக்ஸிஸ் வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனது அறிவிப்பில், ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் தொகையை பொறுத்து வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது சேமிப்பு கணக்கிற்க்கான வட்டி விகிதம் 0.5% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் ரூ.50 லட்ச வரை பேலன்ஸ் தொகை வைத்திருந்தால் 3% வட்டி வழங்கப்படும் என்றும் 10 கோடி ரூபாய் வரை பேலன்ஸ் தொகை இருந்தால் 3.50% வட்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 100 கோடி ரூபாய் வரையிலான பேலன்ஸ் தொகை உள்ளவர்களுக்கும் அதே 3.50 வட்டி விகிதம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 200 கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேற்பட்ட 2500 கோடி ரூபாய் வரையிலான சேமிப்பு தொகையை வைத்திருப்பவர்களுக்கு 3.50 வட்டி விகிதம் வழங்கப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.