SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2வது முறை அதிகமாகும் வட்டி விகிதம்!
ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா வெளியிட்ட அறிவிப்பின் படி கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.
வட்டி விகிதம் அதிகரிப்பு:
மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு கடன் பெற வங்கிகளில் உதவியை எதிர்பார்க்கின்றனர். அதற்கான வட்டி விகிதங்கள் ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா மூலமாக நிர்ணயம் செய்யப்படுகின்றனர். த்திய வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 4.40 சதவீதம் வரைக்கும் உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டியை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது
ஏற்கனவே எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது. தற்போது இரண்டாவது முறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தியுள்ளது. அதனால் ஓர் ஆண்டிற்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.20% ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அதிகரிப்பு மூலம் MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) இல் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மாத தவணை மற்றும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தை (ஈபிஎல்ஆர்) 6.65 சதவீதமாகவும், ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (ஆர்எல்எல்ஆர்) 6.25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் வாகன கடன்கள் உட்பட எந்த வகையான கடனையும் வழங்கும் போது வங்கிகள் EBLR மற்றும் RLLR ஐ விட கிரெடிட் ரிஸ்க் பிரீமியத்தை (CRP) சேர்க்கின்றன.
Exams Daily Mobile App Download
இது குறித்து SBI வெளியிட்ட அறிவிப்பின் படி, திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் மே 15 முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த திருத்தத்தின் மூலம் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் முந்தைய 7.10 சதவீதத்தில் இருந்து 7.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் 0.1 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 7.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித திருத்தத்தைத் தொடர்ந்து, பல வங்கிகள் ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. மேலும் சில வங்கிகள் வரும் நாட்களில் வட்டி விகிதத்தை மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.