SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வட்டி விகிதம் உயர்வு!
எஸ்பிஐ & ஹெச்டிஎஃப்சி வங்கியில் மூத்த குடிமக்கள் பயன் பெரும் வகையில் சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ & ஹெச்டிஎஃப்சி வங்கி:
மூத்த குடிமக்கள் பயன் பெரும் வகையில் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி முதலான பல பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சிறப்பான டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வப்போது வட்டி விகிதம் அதிகரித்து வருவதால் மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கொரோனா கால கட்டத்தில் நெருக்கடியை சந்தித்த மக்கள் பயன் பெரும் வகையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி என்னும் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த திட்டம் செப்டம்பர் 30 2022 வரை நீடிக்கப்பட்டிருந்தது. மேலும், முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு மூத்த குடிமக்கள் சார்பில் மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. எஸ்பிஐ வங்கி சாதாரண டெபாசிட்களுக்கு வழங்கப்படுவதை காட்டிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள குடிமக்களுக்கு 80 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வழங்குகிறது. சாதாரண டெபாசிட் திட்டங்களுக்கு 5.50% வட்டி விகிதம் கிடைக்கிறது. 80 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும் போது 6.30% வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கு மட்டுமே பொருந்தும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி சாதாரண டெபாசிட்களுக்கு வழங்கப்படுவதை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது. மேலும், சிறப்பு வைப்பு நிதி திட்டங்களின் மூலமாக கூடுதலாக 0.25% வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள குடிமக்களுக்கு 75 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வழங்குகிறது. சாதாரண டெபாசிட் திட்டங்களுக்கு 5.60% வட்டி விகிதம் கிடைக்கிறது. 75 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும் போது 6.35% வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கு மட்டுமே பொருந்தும்.