EPFO பயனர்கள் கவனத்திற்கு – மார்ச் மாதத்தில் 2021-22ம் ஆண்டிற்கான வட்டி விகிதம் அறிவிப்பு!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான (EPFO) வட்டி விகிதம் குறித்து இறுதி முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு, 2021-22 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதம் குறித்து அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட்டி விகிதம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) CBT கூட்டம் மார்ச் மாதம் கவுகாத்தியில் நடைபெற இருக்கும் நிலையில், இக்கூட்டத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, EPFO அமைப்பு 2020-21 ஆம் ஆண்டிற்கான 8.5 சதவீத வட்டி விகிதத்தை 2020-21க்கும் பொருந்தும் படி முடிவு செய்த நிலையில், 2021-22 இல் இது தொடருமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த நிதியாண்டிற்கான வருமான கணிப்பின் அடிப்படையில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று CBT மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அனுமதி!
இதற்கு முன்னதாக 2020-21 ஆம் ஆண்டிற்கான EPF டெபாசிட் வட்டி விகிதம் 8.5 சதவீதம் என்று கடந்த மார்ச் 2021 இல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் (CBT) முடிவு செய்யப்பட்டது. இது அக்டோபர் 2021ல் மத்திய நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு, 2020-21 ஆம் ஆண்டிற்கான வட்டி வருமானத்தை 8.5 சதவீதமாக EPFO சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்குமாறு கள அலுவலகங்களுக்கு EPF அமைப்பு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியது.
வேலை தேடும் இளைஞர்களுக்கு குட்நியூஸ் – நிறுவனங்களுக்கான மானிய சலுகை நீட்டிப்பு!
இப்போது, ஒரு நிதியாண்டிற்கான EPF டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை CBT முடிவு செய்தவுடன், அது ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். தொடர்ந்து நிதி அமைச்சகம் மூலம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே EPFO அமைப்பு, பயனர்களுக்கான வட்டி விகிதத்தை வழங்குகிறது. அந்த வகையில் EPFO அமைப்பு, இதற்கு முன்னதாக மார்ச் 2020ல், 2018-19 க்கு வழங்கப்பட்ட 8.65 சதவீத வட்டி விகிதத்திலிருந்து, 2019-20 ஆம் ஆண்டிற்கான EPF வட்டி விகிதத்தை கடந்த ஏழு ஆண்டுகளில் 8.5 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.