Post Office சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகித விபரங்கள்!
இந்திய அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள், மக்களுக்கு உதவும் வகையில் உள்ளது. இதன் வட்டி விகிதங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய பிற விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டங்கள்:
இந்தியாவில் கொரோனா பரவலால் மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. அதனால் மக்கள் தற்போது அதிக அளவில் சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். வருங்கால வைப்பு நிதி திட்டங்கள், மாதாந்திர வருமான திட்டங்கள், கிராம சுரக்ஷா யோஜனா, செல்வ மகள் சேமிப்பு போன்ற திட்டங்கள் உங்களின் எதிர்கால சேமிப்புக்கு உத்திரவாதத்தை அளிக்கிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
தமிழகத்தில் இம்மாவட்டத்திற்கு ஏப்ரல் 11 (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு!
இதில் சேமிப்பதன் மூலம் நீங்கள் முதலீடு செய்த தொகை குறுகிய காலத்தில் இரட்டிப்பாகும். அஞ்சலகத்தில் சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி வகிதம் 7.6% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை 9.47 ஆண்டுகளில் இரட்டிப்பாகி விடும். அடுத்ததாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் வட்டி விகிதம் 7.4% ஆகும். இதில் உங்களது பணம் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தினமும் 417 ரூபாய் சேமிப்பதன் மூலம் 25 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வரை கூட ரிட்டன் பெறலாம்.
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1 ஆகும். இந்த திட்டத்தில் உங்களது பணம் 10.14 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். மாத வருமானத் திட்டத்தின் வட்டி விகிதம் 6.6 ஆகும். இதில் உங்களது பணம் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகும். அடுத்ததாக தேசிய சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 6.8 ஆகும். டைம் டெபாசிட் திட்டத்தில் 5.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இதில், உங்கள் பணம் இரட்டிப்பு ஆக 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். மேலும் சேமிப்பு வங்கி கணக்கில் 4 % வட்டி வழங்கப்படுகிறது.