தமிழகத்தில் கைதிகளுக்கு ‘இன்டர்காம்’ வசதி – மதுரை மத்திய சிறை சாலையில் அறிமுகம்!
தமிழகத்தில் சிறை கைதிகள் தங்களின் உறவினர்களுடன் பேச ஏதுவாக இண்டர்காம் வசதி கொண்டு வரப்பட்டது. மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறை கண்காணிப்பாளர் தலைமையில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இண்டர்காம்:
தமிழகத்தில் சிறை கைதிகள் தொடர்ந்து குற்றவாளிகளாக இருப்பதை தடுக்கவும், அவர்களது வாழ்வை மறுசீரமைக்கும் நோக்கிலும் யோகா, தியானம், விளையாட்டு உள்ளிட்ட பயிற்சிகள் கற்று தரப்படுகிறது. அதனை தொடர்ந்து கைதிகள் சிறையில் இருந்து கொண்டு செய்ய கூடிய வகையில் பணியும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சிறை கைதிகளுக்கு புதிய வசதியாக இண்டர்காம் வசதி கொண்டு வரப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்தில் முதன் முறையாக கோவை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் தங்களின் உறவினர்களுடன் பேச ஏதுவாக இன்டர்காம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கோவையை தொடர்ந்து தற்போது மதுரை மத்திய சிறை சாலையிலும் கைதிகள் குடும்பத்தாருடன் பேச ‘இன்டர்காம்’ வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.70,000 செலவில் உறவினர்கள் நின்று பேச கூடிய இடத்தில் ‘பைபர் கிளாஸ்’ அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான பரிக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் – டிச.30 வரை பதிவு செய்ய கால அவகாசம் !
Exams Daily Mobile App Download
இதன் மூலம் இனி ஒரே நேரத்தில் 17 கைதிகளுடன் உறவினர்கள் பேசலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்ட சிறை சாலைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் உறவினர்கள் 2 மீட்டர் தூரத்தில் கம்பிகளுக்கிடையே நின்று பேசும் போது பேசுவது சரியாக கேட்பதில்லை அதனால் சத்தமாக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை தவிர்க்கவே இண்டர்காம் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.