தமிழகத்தில் ஜன.19 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – திருப்புதல் தேர்வு! ஏற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வுகள்:
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அந்த சமயத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு அதிக அளவில் இருந்து வந்ததால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அரசு வழங்கிய அகமதிப்பீடு முறையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆனால் பொதுத்தேர்வுகளில் மதிப்பெண்கள் அடிப்படியில் தான் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மதிப்பிடப்படுவதால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிக புகார்கள் எழுந்தது.
இதனால் தற்போதைய நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 முதல் 18 வயது மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. முன்னதாக ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகத்தில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அல்லாமல் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம் மாற்றம்! முழு விபரம் இதோ!
ஆனால், தற்போது பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜனவரி 19ம் தேதி முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக 19ம் தேதி முதல் திட்டமிட்டிருந்த திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வை கவனமுடன் நடத்த வேண்டும் என்றும், விடைத்தாள்களில் பள்ளியின் பெயர், முத்திரை, மாணவர்களின் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் குறிப்பிடாமல் இருக்க வேண்டும். ஒரு அறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைத்து தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.