கள்ளக்குறிச்சி பள்ளியில் 3D மூலமாக தீவிர விசாரணை – தடயங்கள் சேகரிப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அந்த பள்ளி முழுக்க 3D ஸ்கேன் மூலமாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும், மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என பலரும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளியின் உடைமை பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, 12 ஆம் வகுப்பு மாணவி உண்மையாகவே தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது அது கொலை சம்பவமா என வித்தியாசமான கோணத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலமாக பள்ளியின் புகைப்படங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவியின் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு – 20,000 வரை சம்பளம்! முழு விவரம் இதோ
இது புறம் இருக்க மறுபுறம் மாநில குழந்தைகள் நல ஆணையம் சார்பிலும் தீவிர விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நேற்றில் இருந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று இரண்டாவது நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி முழுவதும் 3D ஸ்கேனர் மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கான தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.