தீவிரமடையும் கொரோனா பரவல் – ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு! பீதியில் மக்கள்!
உலகம் முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை விட சீனாவில் தான் கொரோனா அதிக அளவு அதிகரித்து வரும் காரணத்தினால் நேற்றிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா அதிகமாக இருந்து வருகிறது. மேலும், கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனா ஒழிந்த பாடில்லை. கொரோனா நோயைக் கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டுமே 95 சதவீத மக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 75 சதவீத மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
Exams Daily Mobile App Download
இது மட்டுமல்லாமல் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு ஓரளவுக்கு உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. மக்களும் பழையபடி பொது இடங்களில் நடமாடத் துவங்கினர்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. சீனாவிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பூஜ்ஜியத்தில் இருந்தது. ஆனால், தற்போது சீனாவில் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 22 மில்லியன் மக்கள் வாசித்து வாழும் ஹாங்காய் மாநகரத்தில் அதிகமாக தொற்று பரவி கொண்டிருக்கும் காரணத்தினால் நேற்றில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக கூட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.