தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பணி தீவிரம் – நாளை ‘இந்த’ மாவட்டத்தில்’ மெகா தடுப்பூசி முகாம்!

0
தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பணி தீவிரம் - நாளை 'இந்த' மாவட்டத்தில்' மெகா தடுப்பூசி முகாம்!
தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பணி தீவிரம் - நாளை 'இந்த' மாவட்டத்தில்' மெகா தடுப்பூசி முகாம்!
தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பணி தீவிரம் – நாளை ‘இந்த’ மாவட்டத்தில்’ மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேலும் இப்பணியை தூரிதப்படும் வகையில் நாளை தலைநகர் சென்னையில் நாளை 37 – வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தடுப்பூசி முகாம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2021 ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றை ஒழிக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. ஆரம்பத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

பிறகு மத்திய அரசின் அனுமதியுடன் 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி விட்டது. இந்த தடுப்பூசிகளின் விளைவால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகிறது.

JIO யூசர்களுக்கு ஜாக்பாட் – குறைந்த விலையில் ரீசார்ஜ் பிளான்! 90 நாட்களுக்கு கவலையில்ல!

Exams Daily Mobile App Download

இதுவரை தலைநகர் சென்னையில் மட்டும் 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 42,61,685 பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து நாளை சென்னையில் 2000 இடங்களில் 37 – வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனால் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் அனைவரும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 30 ம் தேதி வரை இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!