தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – சுகாதாரத்துறை ஷாக் அறிக்கை!

0
தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா - சுகாதாரத்துறை ஷாக் அறிக்கை!
தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா - சுகாதாரத்துறை ஷாக் அறிக்கை!
தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – சுகாதாரத்துறை ஷாக் அறிக்கை!

கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்த கொரோனா தொற்று, மீண்டும் தீவிரமாக தமிழகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறை அறிவிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 3 மாதங்களுக்கு பின் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 2000 ஐ கடந்துள்ளது. இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி, தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,537 -ஆக உள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,819-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 804-ஆக உயர்ந்துள்ளது.மேலும் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 38,028 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,560 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சுகாதாரத்துறை மீண்டும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கையில் எடுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் லட்சக்காணக்கானோருக்கு தடுப்பூசி மீண்டும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நேற்று (ஜூலை 10) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!