இந்த வங்கி கணக்கு தொடங்கினால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு – ஜன் தன் அக்கவுண்ட் அம்சங்கள்!
இந்தியாவில் அனைவருக்கும் வங்கி சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை விபத்துக் காப்பீடு இலவசமாகவே வழங்கப்படுகிறது.
ஜன் தன் கணக்கு:
நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு பிரதமர் அவர்களால் ஜன் தன் கணக்கு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் நிதி உதவிகள் இந்த ஜன்தன் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களும் கூட ஜன் தன் கணக்கு தொடங்கலாம். ஜன் தன் கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி தொகை செலுத்தப்படும். இந்த வட்டித்தொகை வங்கிகளை பொறுத்தது.
Exams Daily Mobile App Download
உங்களின் ஜன் தன் கணக்கில் தொகை இல்லாவிட்டாலும் கவலை இல்லை ஏனெனில் அபராதம் விதிக்கப்படாது. மேலும் ஜன்தன் கணக்கு தொடங்குபவர்களுக்கு இலவசமாக ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு போன்றவையும் வழங்கப்படுகிறது. அதன் மூலம் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஷாப்பிங் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் அனைவருக்கும் 2 லட்சம் ரூபாய் வரை விபத்துக் காப்பீடு இலவசமாகவே வழங்கப்படுகிறது.
Post Office தினமும் ரூ.95 சேமித்தால் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – கிராம சுமங்கல் யோஜனா திட்டம்!
ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் 10,000 ரூபாய் வரை ஓவர்டிராஃப்ட் வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜன் தன் கணக்கு வைத்திருப்போருக்கு அரசு திட்டங்களில் பயன்கள் நேரடியாக வங்கி கணக்கிற்கே செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் எல்லா வங்கிகளிலும் ஜன் தன் கணக்கு தொடங்கி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.