10 நிமிடங்களில் பான் கார்டு பெறுவது எப்படி- வழிமுறைகள் இதோ !!
ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு 10 நிமிடங்களில் பான் கார்டு வழங்கும் நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதை பெறுவதற்கான இணையதள வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பான் கார்டு
இந்தியாவில் வரி செலுத்துவோர் அனைவரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணம் நிரந்தர கணக்கு எண் எனப்படும். இந்திய அரசாங்கத்திடம் வரி செலுத்தினாலோ, பங்குச்சந்தையில் முதலீடு செய்தாலோ, வியாபாரத்தில் ஈடுபட்டாலோ அல்லது ஏதேனும் ஒருவகையில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ அவரிடம் கண்டிப்பாக பான் கார்டு இருக்க வேண்டும். முதலில் புதிதாக பான் கார்டு தேவைப்படுவோர் உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக அல்லது இணைய வழியில் சமர்ப்பித்தால் பான் கார்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இந்த நடைமுறைக்கு சில நாட்கள் ஆகும்.
தமிழக டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு விற்பனை – மதுரை முதலிடம்!!
தற்போது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு பான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். பத்து நிமிடங்களில் சுலபமாக பான் கார்டு கிடைத்து விடும். இந்த புதிய வசதியை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பான் கார்டு இல்லாத மற்றும் இதுவரை பான் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே ஆதார் மூலம் பான் கார்டு பெற முடியும். இதற்கு விண்ணப்பதாரரின் மொபைல் எண் அவருடைய ஆதாருடன் இணைந்திருப்பது அவசியம் ஆகும் .
10 நிமிடத்தில் பான் கார்டு பெறும் வழிமுறைகள் :
- முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Instant PAN through Aadhaar என்பதைக் க்ளிக் செய்யவும்.
- பயனர் “Get New PAN” என்பதைக் கிளிக் செய்யும் போது அடுத்த திரை திறக்கப்படும்.
- சரியான உங்கள் ஆதார் அட்டை எண்ணை பதிவிட வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- Generate Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும்.பிறகு மொபைல் எண்ணிற்கு கு OTP எண் வரும்
- பிறகு மின் அஞ்சல் முகவரியை முகவரியை பதிவிட வேண்டும். பிறகு பத்து நிமிடங்களில் பான் கார்டு கிடைத்து விடும்
- இறுதியாக பயனர் தம் பான் கார்டை தம் மின்னஞ்சலில் பெறலாம். தம் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பித்து இ – பதிவு கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.