பள்ளி மாணவர்களின் காணாமல் போன லேப்டாப்களை கண்டுபிடிக்க அறிவுறுத்தல் – ஐகோர்ட் உத்தரவு!

0
பள்ளி மாணவர்களின் காணாமல் போன லேப்டாப்களை கண்டுபிடிக்க அறிவுறுத்தல் - ஐகோர்ட் உத்தரவு!
பள்ளி மாணவர்களின் காணாமல் போன லேப்டாப்களை கண்டுபிடிக்க அறிவுறுத்தல் - ஐகோர்ட் உத்தரவு!
பள்ளி மாணவர்களின் காணாமல் போன லேப்டாப்களை கண்டுபிடிக்க அறிவுறுத்தல் – ஐகோர்ட் உத்தரவு!

ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட இருந்த லேப்டாப்கள் காணாமல் போய் விட்டது. எனவே, உடனடியாக அந்த லேப்டாப்புகளை கண்டுபிடிக்குமாறு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது.

காணாமல் போன லேப்டாப்:

தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு பலவிதமான நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. அதாவது, இலவச சைக்கிள், நோட்டு புத்தகங்கள், செருப்பு, இலவச மடிக்கணினி என பல உதவி திட்டங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும், இந்தாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அரசின் சார்பில் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட இருக்கிறது. மேலும், இந்த நிதியுதவியை பெற விரும்பும் மாணவிகள் நாளைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடனே இலவச நோட் புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதியே திறந்தாலும் கூட தற்போது வரைக்கும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், விரைவில் நோட் புத்தகங்களை அச்சிடும் படி அரசு அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், இந்தாண்டு இறுதிக்குள் எப்படியும் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிளும் கூடிய விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!

இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்காக வழங்கப்பட இருந்த மடிக்கணினி காணாமல் போய்விட்டது. மேலும், லேப்டாப் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் காவல்துறையினர் இன்னும் அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இதனிடையே, ஐபி அட்ரஸ், மேக் நம்பரை வைத்தே எளிமையாக காணாமல் போன லேப்டாப்புகளை கண்டுபிடித்திருக்கலாமே. ஏன் காவல்துறையினரால் காணாமல் போன லேப்டாப்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிபதி புகழேந்தி கேட்டுள்ளார். மேலும், காணாமல் போன லேப்டாப்புகளை பற்றி உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!