TNPSC Group 2 & 2A தேர்வர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – தவறாமல் படிங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 & 2A தேர்வுகள் இந்த வாரம் 21ம் தேதி நடத்தப்பட உள்ள நிலையில் தேர்வாணையம் தேர்வர்களுக்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.
TNPSC Group 2 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2 வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ள குரூப் 2 & 2A நிலை பதவிகளுக்கான தேர்வுகளை மே 21ம் தேதி அன்று நடத்த உள்ளது. இத்தேர்வுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் தேர்வாணையம் அனைத்து வகையான முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து பத்திரமாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Exams Daily Mobile App Download
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது TNPSC Group 2 தேர்வு குறித்த பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளார். அதன்படி TNPSC Group 2 தேர்வின் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறினார். மொத்தம் 11,78,175 பேர் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 117 தேர்வு மையங்களில் நடப்பு ஆண்டில் தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்வு மையத்தில் தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – டெலிவரி கட்டணம் அவசியமா?
அதன்படி தேர்வுக்கு செல்வதற்கு முன்னதாக ஹால்டிக்கெட், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வில் நாம் எத்தனை வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக 8:59 க்குள் வர வேண்டும். 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் 8 மணி முதல் 8:30 மணிக்குள் நாம் தேர்வு மையத்திற்கு செல்வது போல் ஆயத்தமாக வேண்டும். பின்னர் OMR தாள் கொடுக்கப்பட்டவுடன் அதில் உங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை முறையாக சோதித்து கொள்ள வேண்டும். OMR தாள் மாறி இருந்தாலோ, தவறாக இருந்தாலோ விடைத்தாள் நிராகரிக்கப்படும் அல்லது மதிப்பெண் குறைக்கப்படும். கைக்கடிகாரம் அணிந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஸ்மார்ட்வாட்ச்-ஐ தவிர்க்க வேண்டும்.