இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்வோர் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!
இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க விரும்பும் பயணிகள் செப்டம்பர் 11ம் தேதி முதல் செல்லலாம். கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய சான்று மற்றும் விசா கட்டயாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி கட்டாயம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து வருவதால் அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. முதல்கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமானத்திற்கு அந்தந்த நாட்டு அரசுகள் தடை விதித்தது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவியதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்திய பயணிகள் விமானத்திற்கு தடை விதித்தனர். மற்ற நாடுகளை தொடர்ந்து ஐக்கிய அரசு அமீரகம் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்தும், பயணிகள் விமானத்திற்கான தடையை தொடர்ந்து நீட்டிக்கவும் செய்தது.
Reliance Jio வழங்கும் Emergency Data Loan பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!
தற்போது அரசு அமீரகத்தில் தடுப்பூசிகளின் பயன்பட்டால் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பயணிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 11 முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா 2 டோஸ் தடுப்பூசிகள் மற்றும் முறையான விசா ஆகிய ஆவணங்கள் கட்டாயமாகும்.
செப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அமீரகத்திற்கு செல்வோர் அடையாள மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பித்து முக்கியமாக ஒப்புதலை பெற தடுப்பூசி செலுத்தி கொண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் வேண்டும். மேலும் அவர்கள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விமானம் ஏறுவதற்கு முன் விரைவான பிசிஆர் சோதனை மற்றும் வருகையின் நான்காவது மற்றும் எட்டு நாளில் மீண்டும் பிசிஆர் சோதனை எடுப்பது அவசியம். மேலும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேற்கண்ட இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக என்சிஇஎம்ஏ தெரிவித்துள்ளது.