தமிழகத்தின் நெல்லை மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல் – ஆட்சியர் வேண்டுகோள்!
பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும் தமிழக அரசு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில் நெல்லை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெல்லையில் கனமழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் அவதிப்படுகின்றனர். கோடை காலத்தில் ஏற்பட்ட வெப்பச்சலனத்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தமிழக மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் மழை பெய்த வண்ணமாக இருந்தது. தற்போது கோடை காலம் முடிந்த கையோடு தினமும் தவறாது மழை பொழிந்து சில மாநிலங்களில் வானிலை மையம் எச்சரிக்கை விடும் கட்டத்திற்கு தள்ளியுள்ளது.
Exams Daily Mobile App Download
இவ்வாறு ஓயாது பெய்யும் தொடர் மழையால் அநேக மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரமே மொத்தமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், நாளை கேரளா மாநிலத்திற்கு சிவப்பு அலெர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – முதன்மை செயலாளர் சுற்றறிக்கை!
அதாவது, நாளை நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் அதிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்றும், அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறை 1070, 0462 2501012 என்ற எண்ணிற்கு மக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.