குழந்தைகளை குறி வைத்து தாக்கும் ஓமைக்ரான் பாதிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்!!
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று 5 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிக அளவில் தாக்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
ஓமைக்ரான் தீவிரம்:
உலகம் முழுவதும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது. இதுவரை உருமாற்றம் அடைந்த கொரோனா வகைகளாக ஆல்பா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் உருமாறிய ஒரு கொரோனா வகையாக ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் முதன் முதலில் இந்த ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக 3000 ரூபாய் – அரசுக்கு வலியுறுத்தல்!!
அதன்படி கர்நாடக மாநிலத்தில் 2, குஜராத்தில் 1, மகாராஷ்டிராவில் 8, டெல்லியில் 1, ராஜஸ்தானில் 1 என இதுவரை மொத்தம் 21 பேருக்கு உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பரவி வரும் ஓமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் என அனைவரையும் அதிகமாக தாக்குவதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் தொற்று கண்டறிய சுமார் 7 முதல் 15 நாட்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாவனி & அக்ஷரா – காரசாரமான பிக் பாஸ் ப்ரோமோ!!
இவ்வாறு தென் ஆப்பிரிக்காவில் பாதிக்கப்பட்டதைப் போல் இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று பிரபல மருத்துவர் ஒருவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளான சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகளை தீவிரமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.