MSME ‘அவசர கடன் திட்டம்’ அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் சிறு மற்றும் குறு தொழில்கள் செய்யும் நடுத்தரத் தொழிலாளர்கள் கொரோனா 2 ஆம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அவசர கடன் திட்டம் 2022ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலாளர்களை ஆதரிக்கும் பொருட்டு அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் இத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கும் தேதியும் 2022 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. குறிப்பாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
IPL 2021: போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்! T20 உலக கோப்பை தொடர் எதிரொலி!
இந்த கால நீட்டிப்பு தொடர்பாக ‘தகுதியான துறைகள் அல்லது வணிகங்களுக்கு தொடர்ந்து ஆதரவை உறுதி செய்வதற்காக, இந்தத் திட்டத்தை நீட்டிக்குமாறு பல்வேறு தொழில்துறை அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து அரசாங்கம் கோரிக்கைகளைப் பெற்று வருகிறது’ என்று மத்திய அமைச்சகம் முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது. இப்போது MSME களுக்கான திட்டத்தில் மத்திய அரசாங்கம் பின்வரும் மாற்றங்களை வகுத்துள்ளது. அதன் கீழ்,
ECLGS 1.0 & 2.0 இன் கீழ் இருக்கும் கடன் வாங்குபவர்கள் 29.02.2020 அல்லது 31.03.2021 தேதிகளில் நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகையில் 10% வரை கூடுதல் கடன் உதவிக்கு தகுதியானவர்கள்.
ECLGS 1.0 & 2.0 இன் கீழ் உதவி பெறாத வணிகங்கள், 31.03.2021 வரை நிலுவையில் உள்ள 30% வரை கடன் ஆதரவை பெறலாம்.
ECLGS 3.0 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் முன்னர் ECLGS ஐப் பயன்படுத்தாதவர்கள், 31.03.2021 அன்று நிலுவையில் உள்ள 40% வரை கடன் ஆதரவைப் பெறலாம். இதில் அதிகபட்சமாக ரூ.200 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம்.
IPL 2021: போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்! T20 உலக கோப்பை தொடர் எதிரொலி!
29.02.2020 முதல் 31.03.2021 வரை கட் ஆப் தேதியை மாற்றியதன் காரணமாக, தகுதிவாய்ந்த ECLGS கடன் வாங்குபவர்கள் இந்த வரம்புகளுக்குள் அக்ரீமென்ட் கிரெடிட்டை பெற முடியும்.
அதன்படி, ECLGS இன் கீழ் உதவி பெற்ற கடன் வாங்குபவர்கள் 31.03.2021 முதல் 29.02.2020 வரை (ECLGS
ஆதரவு தவிர்த்து) வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளின் கீழ் கடன் பெற தகுதியுடையவர்கள்.
இந்த அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ECLGS) துவங்கப்பட்டதில் இருந்து, சுமார் 1.15 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் வணிகங்களுக்கு மத்திய நிவாரணம் அளித்துள்ளது. அதாவது கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் இடையூறுகளுக்கு பிறகு தகுதியுள்ள கடன்தாரர்கள் அவர்களின் தேவைகளை சந்திப்பதற்கும், வணிகங்களை மறுதொடக்கம் செய்வதற்கும் இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 24ம் தேதி நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட கடன்களான ரூ.2.86 லட்சம் கோடி தொகை சுமார் 95% சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.