விஜய் டிவி விருது விழாவில் பிரபல சீரியலுக்கு நடந்த சோகம் – ரசிகர்கள் வருத்தம்! வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
கலைஞர்களை கௌரவிக்க மறக்காத விஜய் டிவி எப்படி இந்த காரியத்தை செய்திருக்கும் என்ற கேள்விகளும், விஜய் டிவி விருது விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகளில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் சின்னத்திரை நடிகை ஒருவர் கொடுத்த பதில் ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவி விருது விழா:
ஒவ்வொரு நாளும் விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றுக்காகவே விஜய் டிவி தனியாக பல செலவுகளை புரமோஷனுக்காக இன்று வரை செய்து தான் வருகிறது. சிறந்த தொலைக்காட்சி என்று பேர் பெற்ற விஜய் டிவி அதில் இருக்கும் கலைஞர்களுக்கு வாழ்க்கை படிக்கு முன்னேற உதவும் முதல் படியாக தான் இன்று வரை விளங்கி வருகிறது. முக்கிய எடுத்துக்காட்டு நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் மற்றும் ரியோ ஆகியோர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முல்லைக்கு பிறந்தநாள் – கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்!
அந்த வகையில் விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக சின்னத்திரை விருது விழா என்ற அவார்ட் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 2014 ல் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது விழா கோலாகலமாக நடைபெற்றதில் Fiction-Non Fiction என்று இரண்டு வகையில் விருதுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் விஜய் டிவி விருதுகளை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என்று ரசிகர்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் ரசிகர்கள் மத்தியில் விருதுகள் குறித்த பல கேள்விகள் மற்றும் குழப்பங்கள் உள்ளது.
அதாவது, இப்போ இருக்கும் ஜெனரேஷன் இளைஞர்களை கவர்ந்த ஒரு தொடர் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றுக்கென்ன வேலி’ தான். ஆனால் அந்த சீரியலை தவிர்த்து அனைத்து சீரியலுக்கும் விருது விழாவில் குறைந்த மட்டிலும் ஒரு விருதாவது கொடுக்கப்பட்டதை நினைத்து ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளார்கள். மேலும், இது குறித்து அந்த சீரியலில் மரகதம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ நான் போட்டிருக்கும் டிரஸ் என்னோடது தான், ஆனா நான் கையில வச்சிருக்க அவார்ட் என்னோடது இல்ல’ என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.